உள்ளூர் செய்திகள்

வால்பாறையில் காட்டெருமை துரத்தியதால் கீழே விழுந்த வாலிபர் காயம்

Published On 2023-11-14 14:31 IST   |   Update On 2023-11-14 14:31:00 IST
  • மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
  • முடிஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறை தெப்பக்குளம் மேடு கல்லாறு எஸ்டேட்டை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 27). சம்பவத்தன்று இவர் உடும்பன் பாறையில் இருந்து ஆனைமுடியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு செல்வதற்காக தேயிலை தோட்டத்தின் வழியாக குடி போதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக காட்டெருமை வந்தது. காட்டெருமை கார்த்திக் ராஜாவை துரத்தியது. உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் பயந்து ஓடினார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆனை முடி எஸ்டேட்டில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து முடிஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News