என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "injuried"
- கோவிலுக்கு சென்றவரை தூக்கி வீசியது
- கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
கோவை,
கோவை தேவராயபுரம் அருகே உள்ள புல்லா கவுண்டன்புதூரை சேர்ந்தவர் ராசா கவுண்டர் (வயது 71). விவசாயி. சம்பவத்தன்று அதிகாலை 2 மணியளவில் இவர் சாமி தரிசனம் செய்வதற்காக முள்ளங்காடு வீரகாளியம்மன் கோவிலுக்கு சென்றார்.
அப்போது அங்கு ஒற்றை காட்டு யானை வந்தது. யானையை பார்த்ததும் ராசாகவுண்டர் தப்பி ஓட முயன்றார். அதற்குள் யானை முதியவரை தாக்கி தூக்கி வீசியது.
இதில் ராசா கவுண்டருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராசா கவுண்டரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தோட்டத்தில் வேலை பார்த்தவரை தும்பிக்கையால் தாக்கியது
- ஊட்டி அரசு மருத்துவமனை கல்லூரியில் தீவிர சிகிச்சை
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள கூட்டாடகெங்கரை மந்தட்டியைச் சேர்ந்த செவனன் மனைவி வெள்ளையம்மாள் (வயது 63). இவர் நேற்று காலை தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்தார்.
அப்போது புதர் மறைவில் இருந்து திடீரனெ வெளியே வந்த ஒரு காட்டுயானை துதிக்கையால் தாக்கிவிட்டு சென்றது. இதில் வெள்ளையம்மாளுக்கு படுகாயம் ஏற்பட்டது.
அவரை உறவினர்கள் மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனை கல்லூரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
- முடிஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை தெப்பக்குளம் மேடு கல்லாறு எஸ்டேட்டை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 27). சம்பவத்தன்று இவர் உடும்பன் பாறையில் இருந்து ஆனைமுடியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு செல்வதற்காக தேயிலை தோட்டத்தின் வழியாக குடி போதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக காட்டெருமை வந்தது. காட்டெருமை கார்த்திக் ராஜாவை துரத்தியது. உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் பயந்து ஓடினார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆனை முடி எஸ்டேட்டில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து முடிஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்