உள்ளூர் செய்திகள்

அம்பை அருகே வீட்டில் கருகிய நிலையில் இறந்து கிடந்த இளம்பெண்

Published On 2023-05-29 14:38 IST   |   Update On 2023-05-29 14:38:00 IST
  • சம்பவம் குறித்து சுபா குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • போலீசார், சுபா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சிங்கை:

அம்பை அருகே உள்ள அகஸ்தியர்பட்டி பொன்நகர் ரோட்டை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சுபா (வயது27). இவர் இன்று காலையில் வீட்டில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி அம்பை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சுபா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News