தமிழ்நாடு செய்திகள்

தமிழக அரசு மீது குறை சொல்வதை காங்கிரஸ் அனுமதிக்காது - செல்வப்பெருந்தகை

Published On 2025-12-31 13:40 IST   |   Update On 2025-12-31 13:40:00 IST
  • பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தேசிய தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
  • கதவை திறந்து வைத்துக்கொண்டு கூட்டணிக்கு யாராவது வருவார்களா? என்று எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு மீது குறை சொல்வதை காங்கிரஸ் அனுமதிக்காது. பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தேசிய தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

தமிழக அரசுக்கு எதிராகவும், பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் பேசும் நிர்வாகிகள் மீது அகில இந்திய தலைமையிடம் புகார் அளித்து உள்ளோம்.

இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. யாராலும் கூட்டணியை உடைக்க முடியாது. கூட்டணி சமுத்திரம் போன்றது. அதில் சில அலைகள் வரலாம். போகலாம். கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது.

கதவை திறந்து வைத்துக்கொண்டு கூட்டணிக்கு யாராவது வருவார்களா? என்று எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி கதவை திறந்து வைத்துக்கொண்டு இருந்தாலும் யாரும் செல்லவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News