உள்ளூர் செய்திகள்
கோவையில் இருந்து கேரளாவுக்கு மொபட்டில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
- கோவை பேரூர் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
- மொபட் மற்றும் 50 கிலோ ரேசன் அரிசி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை,
கோவை பேரூர் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த வாலிபர் மொபட்டில் 50 கிலோ ரேசன் அரிசியை கேரள மாநிலத்துக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பி.கே. புதூரை சேர்ந்த விஜய் (வயது 23) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்த மொபட் மற்றும் 50 கிலோ ரேசன் அரிசி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.