உள்ளூர் செய்திகள்

சரக்கு வாகனத்தை திருட முயன்றவர் கைது

Published On 2023-08-06 14:58 IST   |   Update On 2023-08-06 14:58:00 IST
  • ஜெயபிரகாஷ் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
  • விசாரணையில் திருட முயன்றது தர்மபுரி மாவட்டம் முள்ளிப்பட்டியை சேர்ந்த குமார் என்பது தெரிய வந்தது.

கோவை,

கோவை கஸ்தூரிபாளையம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(வயது 55). இவர் கட்டுமான பொருட்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம் ஒரு சரக்கு வாகனம் உள்ளது.

இந்த நிலையில் ஜெயபிரகாஷ் சம்பவத்தன்று இரவு கடையை மூடிவிட்டு சென்றார். அப்போது மர்மநபர் சரக்கு வாகனத்தை திருட முயன்றார்.

அப்போது யாரோ சிலர் நடந்து வரும் சப்தம் கேட்டது. எனவே அந்த திருடன் தப்பி சென்று விட்டான்.இதுதொடர்பாக ஜெயபிரகாஷ் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஜெயபிரகாசின் சரக்கு வாகனத்தை திருட முயன்றது தர்மபுரி மாவட்டம் முள்ளிப்பட்டியை சேர்ந்த குமார் (23) என்பது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News