உள்ளூர் செய்திகள்

குடியிருப்புக்குள் புகுந்து வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை

Published On 2023-10-26 09:07 GMT   |   Update On 2023-10-26 09:07 GMT
  • பந்தலூர் பகுதிகளில் ஒரு சிறுத்தைப்புலி கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் உலா வருகிறது.
  • சிறுத்ைத வேட்டையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது.

எனவே இங்கு காட்டு யானை, கரடி, காட்டு மாடு, சிறுத்தை, புலி ஆகிய வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் பந்தலூர் இந்திரா நகர், எம்.ஜி.ஆர் நகர், நத்தம், ரிச்மண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சிறுத்தைப்புலி கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் உலா வருகிறது.

அங்கு உள்ள வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்கிறது.

இதற்கிடையே நத்தம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் இரவு நேரத்தில் ஒரு சிறுத்தைப்புலி புகுந்தது.

தொடர்ந்து அங்கு உள்ள ஒரு வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடியது. பின்னர் இறைச்சியை வாயில் கவ்வி கொண்டு சென்றது.

இந்த காட்சிகள் குடியிருப்பில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிரா மூலம் தெரியவந்தது. அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. 

Tags:    

Similar News