உள்ளூர் செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் வீட்டின் காம்பவுண்டு சுவரில் மோதிய கார்
- கார் கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் காம்பவுண்டு சுவரை உடைத்து நின்றது.
- காரில் வந்த 3 பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் சிராஜுதீன் நகரை சேர்ந்தவர் கார்த்திக். மகாதேவபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள். அம்ரித் மற்றும் ஹர்ஷத். இவர்கள் 3 பேரும் காரில் மேட்டுப்பாளையம் கண்டியூர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் கெண்டையூர் காமராஜர் நகரில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டின் காம்பவுண்டு சுவரை உடைத்து நின்றது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
காரில் வந்த 3 பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.