உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி அருகே குடிபோதையில் பள்ளி வகுப்பறையில் இருந்த 7 வயது சிறுமியிடம் சில்மிஷம்

Published On 2023-02-10 09:28 GMT   |   Update On 2023-02-10 09:28 GMT
  • தட்டிக்கேட்ட ஆசிரியைகளை வாலிபர்கள் தாக்க முயன்றனர்.
  • 2 வாலிபர்களும் அங்கு இருந்த தப்பி ஓடி விட்டனர்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் காளியாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் நேற்று வழக்கம் போல வகுப்புகள் நடந்து கொண்டு இருந்தது. மாண வர்களுக்கு ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்.

அப்போது ஆதியூர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் அளவுக்கு அதிகமான குடிபோதையில் பள்ளியின் அருகே நடந்து சென்றனர். அவர்கள் பள்ளியில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமியின் அருகே சென்றனர்.

பின்னர் அந்த வாலிபர்கள் ஜன்னல் வழியாக கையை உள்ளே விட்டு சிறுமியின் கன்னத்தில் கிள்ளினர். அதில் ஒரு வாலிபர் இது தான் என்னுடைய ஆள் என கூறி சில்மிஷம் செய்தார்.

இதனை பார்த்த வகுப்பு ஆசிரியை உடனடியாக வெளியே சென்று குடிபோதையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர்களை எச்சரித்தார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் வகுப்பு ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியை ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றனர். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் 2 வாலிபர்களும் அங்கு இருந்த தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து வடக்கிப்பா ளையம் போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளியில் தகராறு செய்தது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Tags:    

Similar News