தஞ்சை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் 92.16 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி
- காலை 10 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளும், மதியம் 2 மணிக்கு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. 13394 மாணவர்கள், 14511 மாணவிகள் என 27905 மாணவ- மனைவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 92.16 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்து ள்ளனர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந் தேதி வரை நடைபெற்றது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்பட இதர பணிகளும் முடிவடைந்தன.
இதனை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளும், மதியம் 2 மணிக்கு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.
தமிழத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் 91.39 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை 15066 மாணவர்களும், 15213 மாணவிகளும் என மொத்தம் 30279 பேர் எழுதினர். இதில் 13394 மாணவர்கள், 14511 மாணவிகள் என 27905 மாணவ- மனைவிகள் தேர்ச்சி பெற்றுள்ள னர். அதாவது 92.16 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்து ள்ளனர்.
இதேபோல் இன்று மதியம் 11-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.