செய்திகள்
காரிமங்கலம் அருகே விபத்தில் விவசாயி பலி
காரிமங்கலம் அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே உள்ள போலத்தம்பட்டியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 46). விவசாயி. இந்நிலையில் சென்னம்பட்டி கிராமத்திற்கு சென்று மகளை பார்த்துவிட்டு காரிமங்கலம் நோக்கி மோட்டார் பைக்கில் வந்து கொண்டு இருந்தார். அங்குள்ள வேகத்தடை மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியபோது நிலை தடுமாறி அவர் சாலையில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் வடிவேல் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காரிமங்கலம் போலீசார் விரைந்து சென்று வடிவேலின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.