செய்திகள்
விபத்து பலி

அன்னவாசல் அருகே வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2021-11-08 19:15 IST   |   Update On 2021-11-08 19:15:00 IST
அன்னவாசல் அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:

அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ராசு (வயது 61). இவர் நேற்று இரவு பரம்பூர்-புதுக்கோட்டை சாலையில் கடம்பராயன்பட்டி விளக்கு அருகே நடந்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராசு மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News