செய்திகள்
கோப்புபடம்

விருத்தாசலம் அருகே ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

Published On 2020-12-11 13:50 IST   |   Update On 2020-12-11 13:50:00 IST
விருத்தாசலம் அருகே ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:

காரைக்குடியில் இருந்து சென்னைக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காலை 8.40 மணியளவில் விருத்தாசலம் அடுத்த வயலூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த என்ஜின் டிரைவர் இதுபற்றி, ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த பெண்ணின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். 

இருப்பினும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார்? தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News