செய்திகள்
பேரறிவாளன்

தந்தைக்கு சிகிச்சை அளிக்க பேரறிவாளன் சென்னை அழைத்து செல்லப்பட்டார்

Published On 2020-01-06 06:50 GMT   |   Update On 2020-01-06 06:50 GMT
தந்தைக்கு சிகிச்சை அளிக்க பேரறிவாளனை போலீசார் பாதுகாப்புடன் வேனிலும், அவரது தந்தையை தனி கார் மூலம் சென்னை காவிரி மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர்.
ஜோலார்பேட்டை:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் அவரது தந்தை சிகிச்சைக்காக பரோலில் வந்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தங்கி தந்தை உடல்நலனை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை அவரது தந்தை குயில்தாசன் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு குயில்தாசனை அழைத்து செல்ல முடிவு செய்தனர்.

வாணியம்பாடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா தலைமையில் ஜோலார்பேட்டை போலீசார் பாதுகாப்புடன் பேரறிவாளனை போலீஸ் வேனிலும், அவரது தந்தை குயில்தாசன் தனி கார் மூலம் சென்னை காவிரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் பேரறிவாளனுக்கு சற்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவருக்கும் சென்னையில் மருத்துவ பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

2 பேரும் சிகிச்சை முடிந்து இன்று இரவு வீடு திரும்புவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News