செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.79 ஆயிரம் கொள்ளை - 8 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

Published On 2019-05-18 11:24 GMT   |   Update On 2019-05-18 11:24 GMT
வந்தவாசி அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.79 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த மடம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது.

இந்தக் கடை மேற்பார்வையாளராக கோழிப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி (40) விற்பனையாளர்களாக மேலத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்(40) கடம்பை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (36) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு மது விற்பனை செய்த தொகை ரூ.79ஆயிரத்து220 பணத்தை பழனி தனது மொபட்டில் வைத்துக்கொண்டு மூவரும் தனித்தனியே பைக்கில் தங்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர். வந்தவாசி சேத்துப்பட்டு நெடுஞ்சாலை இணைப்பு பகுதியான காந்தி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது.

அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தின் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தடியுடன் 3 பேரையும் வழிமடக்கினர்.

மேலும் 4 பேர் பின்னால் வந்து பணம் எங்கே என்று கேட்டு உருட்டுக்கட்டை கத்தியைக் காட்டி மிரட்டினார்கள்.

பணம் இல்லை என்று மூவரும் கூறியதால் 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக உருட்டுக் கட்டையால் தாக்கி கத்தியால் வெட்டி பழனி மொபெட்டில் வைத்து இருந்த ரூ.79 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர்.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த வந்தவாசி டி.எஸ்.பி. தங்கராமன், வட வணக்கம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சசிகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு மேலும் காயமடைந்த 3 பேரையும்சிகிச்சைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பழனி ஏழுமலை, சிவக்குமார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக வட வணக்கம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு கொலைவெறி தாக்குதல் நடத்திய 8 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News