செய்திகள்

களக்காடு அருகே தொழிலாளியை மிரட்டி பணம் பறித்தவர் கைது

Published On 2019-02-26 12:22 GMT   |   Update On 2019-02-26 12:22 GMT
களக்காடு அருகே தொழிலாளியை மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

களக்காடு:

களக்காடு அருகில் உள்ள கீழதேவநல்லூரை சேர்ந்தவர் சுடலை (வயது 30). கட்டிட தொழிலாளி.

நேற்று முன்தினம் சுடலை நாகன்குளம் விலக்கு அருகில் வந்த போது சிங்கிகுளத்தை சேர்ந்த நம்பிராஜன் (29) அவரை மிரட்டி ரூ 100 பணம் பறித்ததாக தெரிகிறது.

இதுபற்றிய புகாரின் பேரில் களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் வழக்கு பதிந்து நம்பிராஜனை கைது செய்தார்.

Tags:    

Similar News