செய்திகள்

விஜயபாஸ்கர் குற்றவாளி அல்ல- அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2018-12-18 08:02 GMT   |   Update On 2018-12-18 08:02 GMT
சம்மன் அனுப்பப்பட்டதால் விஜயபாஸ்கர் குற்றவாளி அல்ல என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #TNMinister #Jayakumar #Vijayabaskar #DMK
ராயபுரம்:

ராயபுரத்தில் உள்ள பள்ளியில் மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் நடைபாதை அமைக்கப்படும். கூட்டணி அமைக்க இது உரிய நேரம் அல்ல. கூட்டணி குறித்து கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். இதுபற்றி ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் தாமரை மலரும் என்று கூறுவது அவர்களது ஆர்வம். இதனை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை இரட்டை இலைதான். மற்றவர்களுக்கு இடம் இல்லை.

தமிழ் இனத்தை எதிர் காலத்தில் அழிக்க காங்கிரசுடன் தி.மு.க. கைகோர்க்கிறதா? குற்றவாளியை தண்டிக்க வேண்டியது நீதிமன்றம்தான். ஒரு வழக்கில் சம்மன் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். அது பெரிய வி‌ஷயம் அல்ல. சம்மன் அனுப்பியதால் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றவாளி அல்ல.


ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தி.மு.க.வினர் டீக்கடை, பிரியாணி கடை என்று ஒரு கடை விடாமல் அடாவடியில் ஈடுபடுகிறார்கள்.

பொழுது விடிந்தால், ஒரு கடை விடாமல் மன்னிப்பு கேட்பதே மு.க.ஸ்டாலினின் வேலையாய் போய்விட்டது. கலைஞர் சிலைத்திறப்பு நிகழ்ச்சிக்கு மின்சாரத்தை சென்னை மாநகராட்சியிடம் இருந்து திருடி எடுத்துள்ளனர். அதற்கு ஆதாரம் உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். (அப்போது அமைச்சர் ஜெயக்குமார் செல்போனில் உள்ள வீடியோ ஆதாரத்தை காண்பித்தார்).

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் என்ன செய்தார்கள்? அவர்கள் பேசுவதை ஏற்கமுடியாது. மூடிய ஆலையை திறக்க வாய்ப்பே இல்லை. உள்ளத்தில் ஒன்று வைத்து உதட்டில் ஒன்று பேசுவது நாங்கள் அல்ல.

கஜா புயல் நிவாரண தொகையை மத்திய அரசிடம் இருந்து பெற தமிழக அரசு போராடி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Jayakumar #Vijayabaskar #DMK
Tags:    

Similar News