செய்திகள்

கோபி அருகே முதியவரிடம் ரூ.2.90 லட்சம் வழிப்பறி கொள்ளை

Published On 2018-12-05 11:19 GMT   |   Update On 2018-12-05 14:35 GMT
கோபி அருகே வங்கியில் இருந்து பணம் எடுத்து சென்ற முதியவரிடம் ரூ.2.90 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:

கோபி அருகே உள்ள கட்டிக்கல் மேட்டை சேர்ந்தவர் காளியண்ணன் (வயது 70).

காளியண்ணன் நேற்று நம்பியூர் சென்றார். அங்கு பாங்கியில் ரூ.3 லட்சம் எடுத்தார். பிறகு தன் மருமகளுக்கு 10 ஆயிரம் கொடுத்தார். பிறகு ரூ.2.90 லட்சத்தை வைத்துக் கொண்டு தனது ஊருக்கு பஸ்சில் புறப்பட்டார்.

பஸ்சை விட்டு இறங்கி தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். வண்டியை ஓட்டியவன் தலையில் ஹெல்மட் அணிந்திருந்தான்.

காளியண்ணன் தனது வீட்டின் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்தவன் காளியண்ணன் கையில் இருந்த ரூ.2.90 லட்சத்தை பறித்தான். பிறகு இருவரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

இதை கண்ட அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தார்கள். எனினும் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.

இந்த துணிகர சம்பவம் தொடர்பாக காளியண்ணன் நேற்று இரவு 10:30 மணியளவில் கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News