செய்திகள்

குளித்தலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் காயம்

Published On 2018-12-02 18:14 GMT   |   Update On 2018-12-02 18:14 GMT
குளித்தலை அருகே லாரி ஒன்றில் கட்டப்பட்டிருந்த கயிறு திடீரென மோட்டார் சைக்கிளில் வந்தவர் மீது மாட்டி கொண்ட விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
குளித்தலை:

குளித்தலை அருகே உள்ள சங்காயிபட்டியை சேர்ந்தவர்கள் வையாபுரி, சவரிமுத்து. இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் குளித்தலை - மணப்பாறை சாலையில் சென்றுகொண்டிருந்தனர். ஆலமரத்துபட்டி ஒத்தக்கடை அருகே சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி ஒன்றில் கட்டப்பட்டிருந்த கயிறு திடீரென மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த வையாபுரியின் கழுத்தி மாட்டியுள்ளது.

இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வையாபுரி, சவரிமுத்து 2 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News