செய்திகள்

ஜெய்ஹிந்துபுரத்தில் 3 வயது மகளுடன் இளம்பெண் மாயம்

Published On 2018-11-22 14:36 GMT   |   Update On 2018-11-22 14:36 GMT
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் 3 வயது மகளுடன் இளம்பெண் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

மதுரை:

மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 25). இவர்களுக்கு விஷ்ணுபிரியா (3) என்ற மகள் உள்ளார்.

கடந்த 19-ந் தேதி பாண்டியராஜன் வேலைக்கு சென்று விட்டார். அதன் பிறகு மகளுடன் முத்து லட்சுமி வெளியே சென்றார்.

ஆனால் இரவு வரை அவர்கள் வீடு திரும்ப வில்லை. மனைவி மற்றும் மகளை பாண்டியராஜன் பல இடங்களில் தேடினார். ஆனால் எந்த தகவலும் கிடைக்க வில்லை.

இதனால் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் பாண்டிய ராஜா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான முத்துலட்சுமி அவரது மகள் விஷ்ணுபிரியா ஆகியோரை தேடி வருகின்றனர்.

இதேபோல் ஜெய்ஹிந்துபுரம் பர்மா காலனியை சேர்ந்தவர் முனியாண்டி (65. இவர் 19-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை என மகன் கணேசன் புகார் கொடுத்துள்ளார். ஜெய்ஹிந்து புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணி வழக்குப்பதிவு செய்து மாயமான முனியாண்டியை தேடி வருகிறார்.

Tags:    

Similar News