செய்திகள்
எடப்பாடி பழனிசாமியும் தினகரனும் இணைய வேண்டும்- தனியரசு எம்எல்ஏ
எதிர்க்கட்சிகளை முறியடிக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகிய 3 பேரும் இணைய வேண்டும் என்று தனியரசு எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். #Thaniyarasu #Edappadipalaniswami #TTVDhinakaran
கரூர்:
கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான தனியரசு கரூர் புலியூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதாவை போல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தது போல, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகிய 3 பேரும் இணைய வேண்டும். இல்லையென்றால், நடைபெற உள்ள 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடும்.
சர்கார் படத்தில் ஜெயலலிதா குறித்து எதிர்மறையாக சித்தரித்து உள்ளதாக தெரிகிறது. அவ்வாறு இருந்தால் அதை நீக்க கொங்கு இளைஞர் பேரவை போராடும். தமிழகம் சார்ந்த பிரச்சனைகளில் அரசின் குறைபாடுகள் செயல்பாடுகளை சுட்டி காட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #Thaniyarasu #Edappadipalaniswami #TTVDhinakaran
கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், எம்.எல்.ஏ.வுமான தனியரசு கரூர் புலியூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதாவை போல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தது போல, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகிய 3 பேரும் இணைய வேண்டும். இல்லையென்றால், நடைபெற உள்ள 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடும்.
எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கும் வேளையில் அ.தி.மு.க. பிளவுபட்டு இருந்தால் அது தி.மு.க.வுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பாக முடிந்து விடும். அவர்கள் மூன்று பேரையும் இணைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதற்கு முயற்சி செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Thaniyarasu #Edappadipalaniswami #TTVDhinakaran