செய்திகள்

சேத்தூரில் குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

Published On 2018-10-21 17:50 IST   |   Update On 2018-10-21 17:50:00 IST
சேத்தூரில் குடும்ப தகராறில் இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் போலீஸ் சரகம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 30). இவரது மனைவி முனீஸ்வரி (26).

இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. வசீகரன், புகழ்மாறன் என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நேற்று இரவும் அவர்களுக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

இதனால் முனீஸ்வரி மன வேதனை அடைந்தார். வீட்டில் உள்ள தனி அறைக்குச் சென்ற அவர், சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் அவரது தாயார் பார்வதி புகார் கொடுத்தார்.

துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

Tags:    

Similar News