செய்திகள்

வேலூர் கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி

Published On 2018-10-15 11:34 GMT   |   Update On 2018-10-15 11:34 GMT
வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்குள் மண் எண்ணை கொண்டு வந்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது.

ஜோலார்பேட்டையை சேர்ந்த ரேவதி(39) அவரது மகன், மகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென மண் எண்ணை கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றார். இதனைக்கண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து மண் எண்ணையை பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி ரேவதி கூறுகையில், எனது கணவர் இறந்துவிட்டார்.அவரது இன்சூரன்ஸ் பணம் வந்தது.அதனை ஜோலார்பேட்டையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் கடனாக பெற்றார். அந்த பணத்தை தற்போது தரமறுக்கிறார். இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தால் அதனை வாங்க மறுக்கின்றனர். அதனால் குழந்தைகளுடன் தீக்குளிக்க வந்தேன் என்றார். அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் மனுகொடுக்க வரும் பொதுமக்கள் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்குள் மண் எண்ணை கொண்டு வந்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
Tags:    

Similar News