செய்திகள்

ஆம்பூர் அருகே லாரி-பஸ் மோதல் 26 பேர் படுகாயம்

Published On 2018-09-27 16:48 GMT   |   Update On 2018-09-27 16:48 GMT
ஆம்பூர் அருகே இன்று அதிகாலை லாரி-பஸ் மோதிய விபத்தில் 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆம்பூர்:

சென்னையில் இருந்து நேற்றிரவு அரசு பஸ் 40 பயணிகளுடன் தருமபுரிக்கு புறப்பட்டது. பஸ்சை வெள்ளக்குட்டை பகுயை சேர்ந்த கெங்காதரன் (வயது 35) டிரைவர் ஓட்டிச் சென்றார்.ஆம்பூர் அடுத்த அய்யனூர் அருகே இன்று அதிகாலை பஸ் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது.

விபத்தில் பஸ் டிரைவர் கெங்காதரன். கண்டக்டர் சந்திர சேகர். பயணிகள் ராமசாமி (55). மாதையன் (44). கோவிந்தராஜன் ( 40). காவேரி (65). சிவகாமி (37). தங்கராஜ் (50). வெண்ணிலா (20). காந்தி (30). புஷ்பா (50). கவிதா (45). பிடல்கோஸ் (32). சந்திரா (50). உள்பட 26 பேர் கடுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News