செய்திகள்

வாயில் நெருப்பை ஊதி சாகசம் செய்த மாணவன் பலி

Published On 2018-09-21 10:11 GMT   |   Update On 2018-09-21 10:13 GMT
வாயில் நெருப்பை ஊதி சாகசம் செய்த மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு:

சென்னை ஊரப்பாக்கம் அய்யஞ்சேரியைச் சேர்ந்தவர் ஜான் வின்சென்ட். இவரது மகன் ஜெபின் (வயது16). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் வாயில் மண்எண்ணெய் ஊற்றி நெருப்பை ஊதி பெரிதாக்கும் சாகச நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்தார். அது போலவே தானும் சாகசம் நிகழ்த்த முடிவு செய்தார்.

அதன்படி மாணவர் ஜெபின் தீப்பந்தம் ஒன்றை கையில் பிடித்துக் கொண்டார். தனது வாயில் மண்எண்ணெய் ஊற்றி தீப்பந்தம் மீது வேகமாக ஊதினார். அப்போது மண்எண்ணெய் அவர் உடல் முழுவதும் பட்டதால் தீப்பிடித்துக் கொண்டது.

உடல் கருகிய அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெபின் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News