செய்திகள்

சீர்காழி அருகே இறந்து கிடந்த ஆண் புள்ளிமான்

Published On 2018-09-18 14:47 GMT   |   Update On 2018-09-18 14:47 GMT
சீர்காழி அருகே உடலில் காயங்களுடன் கிடந்த மானை மீட்ட வனத்துறையினர் எப்படி இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:

சீர்காழியை அடுத்த தென்னலக்குடி வனப்பகுதியில் மான்கள்கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.

இந்த நிலையில் தென்னலக்குடியை அடுத்த கருக்குடி அய்யனார் கோவில் பகுதியில் உள்ள சேக்கணையில் ஆண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் புள்ளி மானை மீட்டனர். அப்போது மானின் உடலில் காயங்கள் இருப்பது தெரிய வந்தது. இதனால் அந்த மான் எப்படி இறந்தது என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்னலக்குடி பகுதியில் வசிக்கும் புள்ளி மான்களை வனத்துறையினர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.#tamilnews

Tags:    

Similar News