செய்திகள்

கழிவு நீர் வசதி செய்து தராவிட்டால் சாலை மறியல்- கிராம மக்கள் அறிவிப்பு

Published On 2018-09-08 12:08 GMT   |   Update On 2018-09-08 12:08 GMT
மொடக்குறிச்சி அடுத்த ஆனந்தம்பாளையம் ஊராட்சி அருகே கழிவு நீர் வெளியேற நடவடிக்கை எடிக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபட போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி அடுத்த ஆனந்தம்பாளையம் ஊராட்சி கரியாகவுண்டன் வலசு என்ற ஊரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆனந்தம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சிஒன்றிய நடு நிலைப்பள்ளி, மாரியம்மன் கோவில், மற்றும் நியாய விலைக்கடை ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

ஆனால் இங்கு உள்ள 200 வீடுகளின் கழிவுநீர் வெளியேற எந்த வசதியும் ஊராட்சி மன்றத்தால் செய்து தரப்படவில்லை.

இந்த ஊராட்சியில் குடிநீர், சாக்கடை, மின்சார வசதி என்று எந்த ஒரு வசதியும் இதுநாள்வரை செய்து தரப்படவில்லை. இந்த ஊரில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தும் சாக்கடை கட்டி தரப்படவில்லை. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. பெயர் தெரியாத காய்ச்சல் அனைவருக்கும் வருகிறது.

இதனால் பொதுமக்கள், குழந்தைகள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் சாக்கடை வசதி கோரி பலமுறை விண்ணப்பம் அளித்தும் பலனில்லை. இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டால் இதுநாள்வரை ஊராட்சிமன்ற தலைவர் சொல்வதை மட்டும் செய்துவந்தோம். கடந்த 10ஆண்டுகளாக எந்தவித ஆவணங்களும் எங்களிடம் இல்லை என்கின்றனர்.

எனவே ஆனந்தம்பாளையம் ஊராட்சி ஆவணங்களை உயர் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து எங்களுக்கு தேவையான சாக்கடைவசதி, குடிநீர் வசதி, மின்சார வசதிகளை செய்து தர முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலைமறியல் செய்ய உள்ளதாகவும் கூறினர். #tamilnews
Tags:    

Similar News