செய்திகள்

விஜயகாந்த் பிறந்தநாள் விழா- சென்னை மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவி

Published On 2018-08-25 09:47 GMT   |   Update On 2018-08-25 09:47 GMT
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மாவட்டம் முழுவதும் கட்சியினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் வக்கீல் விசாகன் ராஜா ஏற்பாட்டில் எழும்பூர், சேப்பாக்கம், துறைமுகம் பகுதிகளில் 68 இடங்களில் கட்சி கொடியேற்றப்பட்டு 680 மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

680 முதியோருக்கு வேட்டி-சேலை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் எழும்பூர் பகுதி செயலாளர் பூங்கா ரமேஷ், சேப்பாக்கம் பகுதி செயலாளர் செந்தில் நாதன், துறைமுகம் பகுதி செயலாளர் ஸ்பாட் ராஜா உள்பட மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மத்திய சென்னை மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் ஏற்பாட்டில் மாவட்டம் முழுவதும் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு சீருடை மற்றும் ஏழைகள், முதியோருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

கோவில்களில் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் கோவிந்தன், வில்லிவாக்கம் பகுதி செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான பிரபு, அண்ணாநகர் பகுதி நிர்வாகிகள் முத்துகுமார், தனசேகர், கோபிநாத், ராஜம்பாள் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வடசென்னை மாவட்ட செயலாளர் ப.மதிவாணன் ஏற்பாட்டில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு சீருடை, கல்வி உதவி தொகை, முதியோர், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சி.எம்.ரவிச்சந்திரன், திரு.வி.க.நகர் பகுதி செயலாளர் அரி, பெரம்பூர் பகுதி செயலாளர் எம்.வேல்முருகன், கொளத்தூர் பகுதி செயலாளர் அலெக்சாண்டர் உள்பட மாவட்ட, பகுதி, வட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.சி.ஆனந்தன் ஏற்பாட்டில் வடபழனி முருகன் கோவிலில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் ஆதரவற்ற முதியோருக்கு உணவு, உடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு சீருடை, கல்வி, உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சைதை அகமது, கூத்த பிரான், புண்ணியமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் ரத்தினம், ராஜ்குமார், மருவை சுப்பு, பிரஸ் பாஸ்கர், நித்யா பாரதி மற்றும் மாவட்ட, வட்ட இணை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி பி.பிரபாகரன் ஏற்பாட்டில் முதியோர் இல்லங்களுக்கு சென்று காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. ஆதரவற்ற பெண்களுக்கு தையல் மிஷின், நிதி உதவி, சுய உதவி குழு பெண்களுக்கு நிதி, மாணவ-மாணவிகளுக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் நாராயணன், விஸ்வநாதன், முருகேசன், சுப்பிரமணி, பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார், நாராயணன், செல்வ ஜோதி லிங்கம், சூரியா, ரமேஷ், கலா, செல்வம், முருகன் மற்றும் மாவட்ட பகுதி வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News