செய்திகள்

திருப்பரங்குன்றம்-திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்: ஓ.பன்னீர்செல்வம்

Published On 2018-08-24 10:14 GMT   |   Update On 2018-08-24 10:14 GMT
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். #ADMK #OPanneerSelvam
திருப்போரூர்:

திருப்போரூர் முருகன் கோவிலில் இன்று காலை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரது இல்லத் திருமண விழா நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். பொறுத்திருந்து பாருங்கள்.

திருச்சி முக்கொம்பு அணையில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பு நன்றாக இருந்தது. அணை உடைந்தது குறித்து ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் சென்றுள்ளார். அவர் ஆய்வு செய்து விளக்கம் அளிப்பார்.

அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் அ.தி.மு.க.வை வலுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கோவிலில் இருந்து காரில் புறப்பட்டார். கண்ணகப்பட்டு சென்றபோது கட்சி பிரமுகர் ஒருவரது டீக்கடைக்கு சென்றார். அங்கு அமர்ந்து டீ குடித்தார். அப்போது டீ நன்றாக உள்ளதாக பாராட்டினார்.

உடன் எம்.பி.க்கள் மைத்ரேயன், மரகதம் குமரவேல், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் குமரவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

முன்னதாக திருப்போரூர் வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு கண்ணகப்பட்டு மற்றும் கோவில் குளம் அருகே மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. #ADMK #OPanneerSelvam
Tags:    

Similar News