செய்திகள்

தஞ்சை பகுதியில் மெக்கானிக் உள்பட 3 பேர் தற்கொலை

Published On 2018-08-09 12:46 GMT   |   Update On 2018-08-09 12:46 GMT
தஞ்சை பகுதியில் மெக்கானிக் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:

தஞ்சை சேப்பனவாரி நடுக்குளம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் பிரபு (வயது 22). மெக்கானிக். இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இதில் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். 

இதுபற்றிய புகாரின் பேரில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் அம்மாபேட்டை அருகே உள்ள புதூர் கலைமகள் நகரைச் சேர்ந்தவர் தெய்வீகராஜன். இவர் நேற்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தெய்வீக ராஜனின் மனைவி பாலசரஸ்வதி அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை அருகே களிமேடு மேலத்தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் ராஜமணிகண்டன் (வயது21). இவர் தீராத வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இதில் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுபற்றிய புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News