விளையாட்டு

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை

Published On 2026-01-30 22:18 IST   |   Update On 2026-01-30 22:18:00 IST
  • தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடந்து வருகிறது.
  • இதில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

பாங்காக்:

தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.

இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத், தாய்லாந்தின் சுபனிதா கடேதோங் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய தேவிகா சிஹாத் 21-19, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனையான இஷாராணி பரூக் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News