செய்திகள்
வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வைகோ-சீமானை கைது செய்ய வேண்டும்- எச்.ராஜா
வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, பாரதி ராஜா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். #HRaja #Seeman #Vaiko
காரைக்குடி:
வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, பாரதி ராஜா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்குடியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறு, குறு தொழில்கள் நலிவடைந்து மூடியதற்கு காரணம் தமிழக அரசு தான். ஜி.எஸ்.டி. காரணம் இல்லை. உலகத்திலேயே அதிக ஊழல் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற 3 மாதமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 50 ஆண்டு கால காவிரி விவகாரத்தில் துரோகம் செய்து தி.மு.க. வும், காங்கிரசும் தான்.
வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வைகோ, சீமான், திருமுருகன்காந்தி, பாரதிராஜா ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #HRaja #Seeman #Vaiko
வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, பாரதி ராஜா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்குடியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
10 ஆண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தினம் ஒரு ஊழல் நடந்தது. ஜி.எஸ்.டி. வரியினால் ஏழை, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைந்துள்ளது. நாடு முழுவதும் 7 கோடி கழிப்பறைகள் ஏழை-எளிய மக்களுக்கு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு தொழில்கள் நலிவடைந்து மூடியதற்கு காரணம் தமிழக அரசு தான். ஜி.எஸ்.டி. காரணம் இல்லை. உலகத்திலேயே அதிக ஊழல் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற 3 மாதமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 50 ஆண்டு கால காவிரி விவகாரத்தில் துரோகம் செய்து தி.மு.க. வும், காங்கிரசும் தான்.
வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வைகோ, சீமான், திருமுருகன்காந்தி, பாரதிராஜா ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #HRaja #Seeman #Vaiko