செய்திகள்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை அவுரித்திடலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நாகப்பட்டினம்:
நாகை அவுரித்திடலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கட்சியை சேர்ந்த பாண்டியன் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராசு கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையினை தினசரி உயர்த்தும் பெட்ரோலிய நிறுவனங்களையும், மத்திய அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் ராமலிங்கம் நன்றி கூறினார்.
நாகை அவுரித்திடலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கட்சியை சேர்ந்த பாண்டியன் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராசு கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையினை தினசரி உயர்த்தும் பெட்ரோலிய நிறுவனங்களையும், மத்திய அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் ராமலிங்கம் நன்றி கூறினார்.