செய்திகள்
கைதான கமல்

மது குடிக்க பணம் தராததால் பாட்டியை அடித்து கொன்ற பேரன்

Published On 2018-05-24 09:20 GMT   |   Update On 2018-05-24 09:20 GMT
பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் கூட்டுரோட்டில் மது குடிக்க பணம் தராததால் பேரனே பாட்டியை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த வஞ்சிவாக்கம் கூட்டு ரோட்டில் வசித்து வந்தவர் மணிமேகலை (வயது 70). இவருடன் மகளின் மகனான கமல் தங்கி இருந்து பொன்னேரியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு வீட்டுக்கு வந்த கமல் மது குடிக்க பணம் கேட்டு மணிமேகலையுடன் தகராறு செய்தார். இதனை மணிமேகலை கண்டித்து பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் மது குடித்து வந்த கமல் மீண்டும் பாட்டி மணிமேகலையிடம் தகராறு செய்தார். அப்போது அருகில் கிடந்த உருட்டுக் கட்டையால் மணிமேகலையை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது மணிமேகலை கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து திருப்பாலைவனம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கமலை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
Tags:    

Similar News