செய்திகள்

மதுரை அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் 6 பவுன் நகை கொள்ளை

Published On 2018-05-23 18:26 IST   |   Update On 2018-05-23 18:26:00 IST
மதுரை அருகே வீடு புகுந்து தனியாக இருந்த மூதாட்டியிடம் உறவினர் போல் பேசி 6 பவுன் நகையை பறித்து சென்றவர் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை:

மதுரை அருகே உள்ள உறங்கான்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 33). இவரது பாட்டி அங்குள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

நேற்று மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து தனியாக இருந்த மூதாட்டியிடம் உறவினர் போல பேசியுள்ளார். இதை நம்பிய அந்த பெண் அவரிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி விட்டார்.

இது குறித்து ராஜேஷ், ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் ஜெயலட்சுமி இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News