செய்திகள்

ஆவுடையார்கோவில் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

Published On 2017-11-16 19:56 IST   |   Update On 2017-11-16 19:56:00 IST
ஆவுடையார்கோவில் அருகே பஸ்சில் இருந்து இறங்கிய பெண் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
அறந்தாங்கி:

ஆவுடையார்கோவிலை அடுத்த பிராந்தணியைச் சேர்ந்தவர் சின்னையா, மனைவி சரோஜா (வயது 48). இவர் நேற்று அறந்தாங்கி சென்று விட்டு அரசு டவுன் பஸ்சில் பிராந்தணி சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் இருந்து இறங்கிய போது சரோஜா தவறி கீழே விழுந்தார்.

இதில் காலில் பஸ் சக்கரம் ஏறியதால் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குசிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News