செய்திகள்

அறந்தாங்கி அருகே எலி மருந்தை தின்று விவசாயி தற்கொலை

Published On 2017-11-16 19:23 IST   |   Update On 2017-11-16 19:23:00 IST
அறந்தாங்கி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
அறந்தாங்கி:

அறந்தாங்கியை அடுத்த வேட்டனூரைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது 60). இவருக்கு கோவிந்தம்மாள், பானுமதி என்ற 2 மனைவிகள், 5 குழந்தைகள். இதில் கோவிந்தம்மாள் ஏற்கனவே இறந்து விட்டார்.

இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பிச்சைமுத்து எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News