செய்திகள்
நீலாங்கரை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
நீலாங்கரை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். இதுகுறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவான்மியூர்:
சேலையூரை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 20). தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கல்லூரி நண்பரான சிவக்குமாருடன் (20) மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்தார். நேற்று இரவு அவர்கள் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
நீலாங்கரையை அடுத்த அக்கரை செக்போஸ்ட் அருகே வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர மரத்தில் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே சரத்குமார், சிவக்குமார் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேடவாக்கத்தை அடுத்த கோவிலம்பாக்கம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் பலராமன் (52). இவர் அதே பகுதியை சேர்ந்த பாலாஜியுடன் பனையூர் பஸ்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார்.
வேகத்தடையில் ஏறி இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி பலராமன் பலியானார். பாலாஜி படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலையூரை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 20). தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கல்லூரி நண்பரான சிவக்குமாருடன் (20) மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்தார். நேற்று இரவு அவர்கள் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
நீலாங்கரையை அடுத்த அக்கரை செக்போஸ்ட் அருகே வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர மரத்தில் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே சரத்குமார், சிவக்குமார் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேடவாக்கத்தை அடுத்த கோவிலம்பாக்கம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் பலராமன் (52). இவர் அதே பகுதியை சேர்ந்த பாலாஜியுடன் பனையூர் பஸ்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார்.
வேகத்தடையில் ஏறி இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி பலராமன் பலியானார். பாலாஜி படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.