செய்திகள்

தலைஞாயிறு அருகே கார் குளத்தில் பாய்ந்து பெண் பலி

Published On 2017-04-15 11:41 IST   |   Update On 2017-04-15 11:41:00 IST
தலைஞாயிறு அருகே கார் குளத்தில் பாய்ந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த சசிமேத்யூ மற்றும் உறவினர்கள் 10 பேர் ஒரு காரில் புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு வந்தனர். இந்த கார் இன்று காலை நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த ஓடாச்சேரி அருகே வந்த போதுகட்டுப்பாட்டை இழந்து சாலையோர குளத்தில் பாய்ந்தது.

இதில் சசிமேத்யூவின் மனைவி சீனியம்மாள் (வயது 39) படுகாயம் அடைந்து சம்ப இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காரில் வந்த 10 பேரும் காயம் அடைந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும். தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைகாக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான சீனியம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News