செய்திகள்
சீர்காழி அருகே ஆசை வார்த்தை கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்
சீர்காழி அருகே ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சீர்காழி:
சீர்காழி அடுத்து துறையூர் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 30). இவர் மேளம் அடிக்கும் வேலை செய்து வந்தார்.
புகழேந்தி அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததில் அவர் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதையறிந்த இளம்பெண்ணின் தாய் அதிர்ச்சி அடைந்து இதுபற்றி சீர்காழி போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் அழகுதுரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து புகழேந்தியை வலைவீசி தேடி வருகின்றனர்.