செய்திகள்

வேதாரண்யம் அருகே விவசாயி மீது தாக்குதல்: 3 பேர் கைது

Published On 2017-04-11 16:25 IST   |   Update On 2017-04-11 16:25:00 IST
வேதாரண்யம் அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் போலீஸ் சரகம் அண்டகத்துறையை சேர்ந்தவர் குணசேகரன் மகன் வடிவேல் (31). இவருக்கு சொந்தமான கருவேல மரத்தை இவரது உறவினரான ராதா என்பவர்வெட்டி உள்ளார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த விவசாயி செல்வம் கருவேல மரத்தை வெட்டி முடித்த உடன் வேலியை சரியாக அடைத்துவிட்டு செல்லுபடி ராதாவிடம் கூறியுள்ளார். இதுபற்றி ராதா வடிவேலிடம் கூறியுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த வடிவேல், செல்வம் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்து அங்கு வந்த குணசேகரன் மற்றும் ராதா ஆகிய 2 பேரும் செல்வத்தை இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர். இதில் செல்வம் படுகாயம் அடைந்தார். உடனே அவரைஅக்கம் பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

இது குறித்து செல்வம் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து வடிவேல், குணசேகரன், ராதா ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.

Similar News