உள்ளூர் செய்திகள்

கைதானவர்களை படத்தில் காணலாம்.

வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

Published On 2022-06-10 07:40 GMT   |   Update On 2022-06-10 07:40 GMT
  • சதீஷ்குமார் பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.
  • பல்லடம் அருகே மதனபுரி டவுனில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

பல்லடம்,

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்( வயது 32) . இவர் தற்போது பல்லடம் அருகேயுள்ள சாமளாபுரம் தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 7 ந்தேதி இரவு நண்பரைப் பார்க்க பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை சென்று விட்டு அங்குள்ள நால்ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த 2 வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.3,500 பணத்தை பிடிங்கிக் கொண்டு சென்றுவிட்டனர்.

இதையடுத்து சதீஷ்குமார் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் கரணம்பேட்டை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக சென்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் சதீஷ்குமாரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சிவகங்கையை சேர்ந்த மாசானம் மகன் அருண் (வயது 22,) அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் சக்திவேல் ( 21) என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் பல்லடம் அருகே மதனபுரி டவுனில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 4.3/4 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News