உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், பூட்டிய வீட்டில் 11 பவுன் நகை திருட்டு
- வீட்டில் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
தஞ்சாவூர்:
தஞ்சை விளார் ரோடு அருள் நகரை சேர்ந்தவர் ஆனந்த் எட்வின் ( வயது 33) . சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 11 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் இந்த கைவரிசையை காண்பித்தது தெரியவந்தது.
இது குறித்த அவர் தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.