பெண்கள் உலகம்
null

சட்டப்படி திருமணம் செய்யாவிடினும், 2வது மனைவி ஜீவனாம்சம் கோரமுடியுமா?

Published On 2025-11-04 18:00 IST   |   Update On 2025-11-04 18:00:00 IST
  • சட்டப்படி விவாகரத்து செய்யாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
  • ஒருவர் செய்வது குற்றம் என அறிந்தாலும், பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் மட்டுமே, சட்டம் தலையிடும்.

தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா வழக்கில் இன்று முக்கிய திருப்பம் அரங்கேறியுள்ளது. இதுவரை தன்மீது ஜாய் கிரிசில்டா கூறிய எந்த குற்றச்சாட்டுக்கும் விளக்கமளிக்காத ரங்கராஜ், சமீபத்தில் மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையில் தான்தான் ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தந்தை என ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துக் கொண்டதையும் ஒப்புக் கொண்டுள்ளார். இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் மற்றும் மகளிர் குற்றத் தடுப்பு துணை ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. குழந்தைக்கு தந்தை தான் என ஒப்புக்கொண்டதால் டிஎன்ஏ பரிசோதனை தேவையில்லை எனவும், அவர்மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமையியல் நீதிமன்றத்தை ஜாய் கிரிசில்டா நாடும் வரையில், அவருக்கு தற்போது பிறந்துள்ள குழந்தைக்கான பராமரிப்பு செலவை மாதம்பட்டி ரங்கராஜ், மறுப்பு தெரிவிக்காமல் ஏற்கவேண்டும் எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் கைது செய்யப்படுவாரா என இணையவாசிகள் விவாதம் நடத்தி வருகின்றனர். இப்படி இவர்கள் சொல்வதுபோல மாதம்பட்டி ரங்கராஜை கைது செய்ய இயலுமா? இந்திய சட்டங்கள் என்ன கூறுகின்றன என்பது குறித்து காண்போம். 

இந்தியச் சட்டப்படி கணவர் விவாகரத்துப் பெறாமல் இரண்டாவது திருமணம் செய்தால், அவர்மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்து, சிறை தண்டனையும் விதிக்கலாம். ஆனால் அதற்கு கணவரின் திருமணத்தால் பாதிக்கப்பட்ட முதல் மனைவி புகார் அளிக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் மட்டுமே, சட்டம் தலையிடும். மற்றப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. மற்றொன்று முதல் மனைவியுடன் விவாகரத்து வாங்கவில்லை என்பதை அறிந்தே, இரண்டாவது திருமணம் செய்துகொண்டால், அப்பெண்ணிண் குற்றச்சாட்டு எடுபடாது. ஆனால் ரங்கராஜின் வழக்கில் மகளிர் ஆணையம் தற்போது உறுதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ளதால் கைது செய்யப்படலாம் என சிலர் கூறிவருகின்றனர். மற்றொன்று ஜாய் கிரிசில்டா கோரிய பராமரிப்பு தொகை... தனக்கும், தனது குழந்தைக்கும் மாதந்தோறும் ரூ.6.50 லட்சம் பராமரிப்புத் தொகை வழங்கக் கோரி ரங்கராஜுக்கு ஜாய் கிரிசில்டா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் சட்டப்படி திருமணம் செய்யாவிட்டாலும், பராமரிப்புத்தொகை  நிச்சயம் வழங்கப்பட வழிவகை உள்ளது. இதுபோன்ற பல வழக்குகளில் நீதிமன்றங்கள் இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. முதல் மனைவி தடுத்தாலும் போதிய காரணங்கள் இருந்தால் வழங்கலாம். காரணம் கணவரின் தவறு என்பதால் முதல் மனைவி தடுத்தாலும் ஜீவனாம்சம் வழங்கலாம். 


இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன 

இவர்கள் வழக்கு எப்படி இருந்தாலும், சட்டங்கள் என்ன சொன்னாலும் பெண்கள் மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டியது ஒன்றுதான். திருமணம் முடிந்திருந்தால், விவாகரத்து செய்யாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளாதீர்கள். அதுபோல நீங்கள் திருமணம் செய்ய உள்ளவர், ஏற்கனவே திருமணம் ஆனவர் எனில், அவருடைய விவாகரத்தை உறுதிசெய்து பின்னர் ஒரு உறவுக்குள் செல்லுங்கள். உங்கள் தரப்பில் உணர்ச்சி ரீதியான நியாயங்கள் முன்வைக்கப்பட்டாலும், சட்டத்தின்படியே அரசு செயல்பட இயலும். படிப்பறிவு இருந்தாலும், நடைமுறையை அறிந்திருந்தாலும் உறவுகளுக்குள் செல்லும்போது சில முடிவுகளை எடுப்பது சிக்கலான ஒன்றுதான். ஆனால் எப்போதும் இந்த சமூகம் பெண்களையே குறைக்கூறும். அதனால் உங்கள் நலனுக்காக எந்த முடிவையும் எமோஷனலாக எடுக்காமல், நடைமுறையோடு ஒப்பிட்டு, ஆராய்ந்து எடுங்கள். 

Tags:    

Similar News