குழந்தை பராமரிப்பு

ரத்த சர்க்கரை குறைவால் குழந்தைக்கு வரும் பாதிப்புகள்

Published On 2023-01-28 05:18 GMT   |   Update On 2023-01-28 05:18 GMT
  • குழப்பமான மனநிலையில் இருக்கும்.
  • குழந்தையின் பேச்சு குழறும்.

நீரிழிவு நோய் உள்ள குழந்தைக்கு ரத்தச்சர்க்கரை குறைய ஆரம்பித்துவிட்டால், குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும். அதிகம் பசிக்கும், வியர்க்கும், படபடப்பு வரும், நாக்கு உலரும், உடல் நடுங்கும்..

குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும். குழப்பமான மனநிலையில் இருக்கும். இன்னும் சொல்லப்போனால், குடிபோதையில் நடப்பது போன்ற நிலையில் இருக்கும். மயக்கம் வரும். சில வேளைகளில் வலிப்பும் வரலாம்.

பொதுவாக, மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது. ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை குறைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும், என டாக்டர்கள் கூறுகிறார்கள்.

எனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால், உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையை தடவிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தை பள்ளியிலும் சொல்லி வைப்பது நல்லது, எனவும் டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Tags:    

Similar News