வழிபாடு

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் லட்ச வில்வார்ச்சனை

Published On 2023-12-01 05:00 GMT   |   Update On 2023-12-01 05:00 GMT
  • கபிலேஸ்வரர் கோவிலில் நேற்று லட்ச வில்வார்ச்சனை
  • உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா

திருமலை:

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் நேற்று லட்ச வில்வார்ச்சனை நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு மூலவரை சுப்ர பாதத்தில் துயிலெழுப்பி அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை நடந்தது. அதன்பிறகு காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை லட்ச வில்வார்ச்சனை நடந்தது.

மாலை உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில் கோவில் அதிகாரிகளும், பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News