வழிபாடு

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவிலில் 1-ந் தேதி தேரோட்டம்

Published On 2023-05-27 08:31 GMT   |   Update On 2023-05-27 08:31 GMT
  • 31-ந்தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
  • 2-ந்தேதி தீர்த்தவாரியும், பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடக்கிறது.

பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூர் முல்லைவனநாதர் உடனுறை கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் தினசரி சுவாமி- அம்பாள் காலை மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. .

விழாவில் கடந்த 24-ந்தேதி கொடியேற்றமும், ஆன்மீக சொற்பொழிவும், தொடர்ந்து சுவாமி- அம்பாள் வெள்ளி பல்லக்கில் வீதியுலாவும் நடந்தது. 25-ந்்தேதி காலை வெள்ளி பல்லக்கும், இரவு சூரிய பிரபையில் சுவாமி-அம்பாள் வீதியுலா காட்சியும் நடந்தது.

நேற்று காலை வெள்ளி பல்லக்கும், இரவு பூத வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலாவும், இரவு மாணவிகள் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. 27-ந்தேதி சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 28-ந்தேதி ஓலை சப்பரத்தில் சுவாமி வீதியுலாவும், 31-ந்தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், அடுத்தமாதம்(ஜூன்) 1-ந்தேதி கட்டுத்தேர் தேரோட்டமும், 2-ந்தேதி தீர்த்தவாரியும், பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ஆசைத்தம்பி மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News