வழிபாடு

திருத்தணி முருகன் கோவிலில் படித்திருவிழா கோலாகலம்

Published On 2025-12-31 11:41 IST   |   Update On 2025-12-31 11:41:00 IST

    திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதி நாளில் திருப்படி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    மலை கோவிலுக்கு செல்லும் பாதையில் ஒரு ஆண்டை குறிக்கும் வகையில் உள்ள 365 படிக்கட்டுகளில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்வார்கள்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான படித்திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. திருத்தணி மலையடிவாரத்தில் உள்ள முதல் படிக்கட்டில் சிறப்பு பூஜைகள் நடத்தி விழா தொடங்கப்பட்டது.

    திருப்புகழ், தேவாரம், திருவாசகம் மற்றும் பக்தி பாடல்கள் பாடியபடி பக்தர்கள் ஒவ்வொரு படிகட்டுகளின் வழியாக நடந்து சென்று சுவாமியை வழிபடுகின்றனர்.

    திருப்படித்திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி கோவிலில் இன்று இரவு முழுவதும் நடை திறந்திருக்கும். நள்ளிரவு புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. பக்தர்கள் விடியவிடிய சாமி தரிசனம் செய்யலாம்.

    இன்று காலை உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் தேர்வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    Tags:    

    Similar News