வழிபாடு

புத்தாண்டு: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

Published On 2023-12-31 05:37 GMT   |   Update On 2023-12-31 05:37 GMT
  • ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம்.
  • பக்தர்கள் முருகன் பக்தி பாடல்கள் பாடி திருச்செந்தூருக்கு பாதயாத்திரை.

திருச்செந்தூர்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (திங்கட்கிழமை) ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடக்கிறது.

இதை முன்னிட்டு அதி காலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப தை திருநாளை கொண்டாடும் வகையில் அதற்கு முன்பாக கோவில்பட்டி, விருதுநகர், சங்கரன்கோவில், நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும், காவடி எடுத்து வந்தும் அலங்கார செய்த வாகனங்கள் முன் செல்ல பக்தர்கள் முருகன் பக்தி பாடல்கள் பாடி திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்தவாறு உள்ளனர்.

தற்போது பருவ மழை பெய்து ஒய்ந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஏராளமான பக்தர்கள் வந்தவாறு உள்ளனர்.

Tags:    

Similar News