கிரிக்கெட்

ஷ்ரேயாஸ் அய்யர்

null

மும்பை ரஞ்சி அணியில் ஷ்ரேயாஸ் அய்யர்

Published On 2024-02-27 15:41 GMT   |   Update On 2024-02-27 15:46 GMT
  • இந்திய அணியில் ரன் குவிக்க திணறியதால் உள்ளூர் போட்டிகளில் விளையாட வலியுறுத்தல்.
  • காயம் காரணமாக ரஞ்சி போட்டியில் விளையாட முடியாது என ஷ்ரேயாஸ் அய்யர் அறிவித்ததால் சிக்கல் ஏற்பட்டது.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர். இவருக்கு பிசிசிஐ-க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. கிரிக்கெட்டில் சிறுசிறு காயம் ஏற்பட்டு அணியில் இருந்து விலகி மீண்டும் அணிக்கு திரும்ப தயாராகும்போது ரஞ்சி டிராபியில் விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்துவது உண்டு.

அதேபோல் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து அதிக ரன்கள் அடிக்க முடியாமல் ஃபார்ம் இன்றி தவிக்கும்போதும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வலியுறுத்துவது உண்டு.

ஆனால் பிரபல நட்சத்திர வீரர்கள் பெரும்பாலும் ரஞ்சி போட்டிகளில் விளையாடுவதில்லை. நேரடியாக இந்திய அணிக்கு தகுதி பெறுவார்கள். அந்த வகையில் ஷ்ரேயாஸ் அய்யர் ரஞ்சி டிராபியில் விளையாட ஆர்வம் காட்டவில்லை. இதனால் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையே காயம் காரணமாகத்தான் ரஞ்சி டிராபியில் விளையாடவில்லை என ஷ்ரேயாஸ் தெரிவித்ததாகவும், அதேவேளையில் அவருக்கு காயம் இல்லை பயிற்சியாளர் தெரிவிததாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்பட்டுள்ளார்.

மார்ச் 2-ந்தேதி தொடங்கும் அரையிறுதி போட்டியில் மும்பை- தமிழ் நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ரஞ்சி டிராபி காலிறுதியில் தமிழ்நாடு அணி சவுராஷ்டிராவை இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

மும்பை- பரோடா இடையிலான போட்டி டிராவில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் மும்பை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு அரையிறுதி போட்டியில் விதர்பா- மத்திய பிரதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. காலிறுதியில் மத்திய பிரதேசம் ஆந்திராவை வீழ்த்தியிருந்தது. கர்நாடகாவை விதர்பா வீழ்த்தியிருந்தது.

Tags:    

Similar News